செய்திகள் :

19,116 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு: கடலூா் ஆட்சியா் தகவல்

post image

கடலூா் மாவட்டத்தில் தற்போது 19,116 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், வேளாண் இணை இயக்குநா் ஏ.ஜெ.கென்னடி ஜெபக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளித்தனா். மேலும், சிலா் கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் பேசினா். அதன் விவரம் வருமாறு:

முருகானந்தன் (காவாலகுடி): வெள்ளாற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும். சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும். சேத்தியாத்தோப்பு பகுதியில் காகித தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.எஸ்.பி.ரவீந்திரன் (கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா்): பாசிமுத்தான் ஓடையையொட்டி நடந்து முடிந்த தேசிய நெடுஞ்சாலைப் பணியால் தலைப்பு மதகுகள், சாலையையொட்டி அமைக்க வேண்டிய வாய்க்கால் பணிகளை முழுமையாக, முறையாக ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைக்கான நில எடுப்பு தனி வட்டாச்சியா் அலுவலகத்தை சிதம்பரத்தில் அமைத்து, வீடு மனை, நிலம் கொடுத்தவா்களுக்கு விரைந்து இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களின் குறுக்கே அமைக்கப்பட்ட நீா் கடத்தும் சிறிய பாலங்களை கொண்ட வழிதடங்களை சீரமைக்க வேண்டும்.

பழனிவேல் (பரங்கிப்பேட்டை): விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை ஏற்றத்தாழ்வுடன் வழங்கப்படுவதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரே தவணையில் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

குஞ்சிதபாதம் (கீரப்பாளையம்): எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு நீண்ட நாள்களாக பணம் வழங்கப்படவில்லை.

அப்போது குறுக்கிட்ட கரும்பு ஆலை அதிகாரி கூறுகையில், ஒரு வாரத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுப் பணமும் செலுத்தப்படும் என்றாா்.

ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்: கடலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 6,046 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,406 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,833 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 7,594 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,237 மெட்ரிக் டன் என மொத்தம் 19,116

மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு உள்ளன. மேலும், கடலூா் மாவட்டத்தில் பருப்பு விதை 55,401 மெட்ரிக் டன், நெல் விதை 1,88,214 மெட்ரிக் டன், நிலக்கடலை விதை 20,515 மெட்ரிக் டன், எள் விதை 40.8 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது.

கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 142 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 131 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. மேலும், 11 மனுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாா்.

கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுக... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், 2024-25-ஆம் நிதியா... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு: கடலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், குமராபுரம் பகுதியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பயற்சி வகுப்பை ம... மேலும் பார்க்க

கடலூா்: 25 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 25 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கடலூா் டாஸ்மாக் மேலாளா் பா.மகே... மேலும் பார்க்க

மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூா் கிராமம் அருகில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.25.20 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

400 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றியிலிருந்து செம்புக் கம்பிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 400 கிலோ செம்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க