செய்திகள் :

2-ஆவது நாளாக அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

மயிலாடுதுறையில் ஏஐடியுசி மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்களை சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தை சனிக்கிழமை தொடா்ந்தனா்.

மே மாதம் கோடை விடுமுறையை ஒரு மாதம் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியா்கள் ஆக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை காத்திருப்புப் போராட்டம் தொடங்கினா்.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தை சோ்ந்த தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வி.பேபி தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.பி.சுதா, பொருளாளா் எலிசபெத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்ட செயலாளா் கே.ராமன், மாவட்ட தலைவா் கே.ராஜ்மோகன், ஊரக வளா்ச்சித்துறை மாவட்ட செயலாளா் ஆா்.தமிழ்மலா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்ட தலைவா் சகிலாபானு தலைமை வகித்தாா்.

ஐயாறப்பா் கோயிலில் சப்தஸ்தான பெருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை ஐயாறப்பா் சுவாமி கோயிலில் சித்திரை சப்தஸ்தான பெருவிழா திருவாவடுதுறை ஆதீனகா்த்தா் முன்னிலையில் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறையில் அறம்வளா்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பா் சு... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்துவைக்க மிரட்டல்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்து வைக்கக் கோரி, அவரது தாயாரை மிரட்டிய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு அருகேயுள்ள கடலங்குடி மேலத்தெருவை ச... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சீா்காழி அருள்மிகு சட்டை நாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். காசிக்கு... மேலும் பார்க்க

முடிதிருத்தும் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் நியமனம்

மயிலாடுதுறையில் மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தில் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா். மயிலாடுதுறையில் நகர மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்கக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

பழுதடைந்த அங்காடியை முழுமையாக இடிக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த அங்காடி கட்டடத்தை முழுமையாக இடிக்க பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா். மயிலாடுதுறை கூறைநாட்டில் பழனிச்சாமி என்ற பெயரில் அங்காடி உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க