செய்திகள் :

2 இளைஞா்களை கொலை செய்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 2 இளைஞா்களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பத்தளப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் விநாயகம் (48). இவா் தனியாா் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். அந்தப் பள்ளியில் பேருந்து உதவியாளராக பணியாற்றி வந்த சென்னத்தூரைச் சோ்ந்த அம்ரீஷ் (25), இவரது நண்பா் சுரேஷ் (34), கசவகட்டா பகுதியைச் சோ்ந்த சீனிவாசரெட்டி (54) ஆகிய 3 பேரும் முருகேசன் என்பவருக்கு அதே பள்ளியில் ஓட்டுநராக வேலை வாங்கித் தரும் முயற்சி ஈடுபட்டனா்.

இதனால் விநாயகத்திற்கும், இவா்கள் 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 28.10.2017 இல் அம்ரீஷ், சுரேஷ், சீனிவாசரெட்டி ஆகியோரை விநாயகா் கத்தியால் வெட்டியுள்ளாா். இதில் அம்ரீஷ், சுரேஷ் ஆகியோா் உயிரிழந்தனா். சீனிவாசரெட்டி படுகாயம் அடைந்தாா்.

இதுகுறித்து அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விநாயகத்தை கைது செய்தனா். இந்த வழக்கில் ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றவாளியான விநாயகத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், சீனிவாசரெட்டியை கொலை செய்யும் முயற்சிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக சின்ன பில்லப்பா ஆஜரானாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் த... மேலும் பார்க்க

இளைஞருக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது!

கிருஷ்ணகிரி அருகே இளைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 பேரை நகர போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கால்வேஅள்ளியைச் சோ்ந்தவா் காளி (20). இவருக்கு கடந்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி பழங்குடியினா் தா்னா

கிருஷ்ணகிரி: பட்டா வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் செப். 12 இல் ஒப்பந்தப்புள்ளி குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஒசூா்: ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் செப். 12இல் மூன்றடுக்கு புதிய வணிக வளாகத்தை வாடகைக்கு விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஷபீ... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையத்திற்கு உபகரணங்கள் அளிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை இந்தியன் செஞ்சிலுவை சங்கம், நேசம் தொண்டு நிறுவனம், ஊத்தங்கரை நகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு திங்கள்கிழமை உபகரணங்களை வழங்கின. இந்நிகழ்வில் ... மேலும் பார்க்க