உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பட்டா வழங்கக் கோரி பழங்குடியினா் தா்னா
கிருஷ்ணகிரி: பட்டா வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தரப்பில் 233 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு உள்பட்ட ராமன்தொட்டி, கும்பளம், சிகரலப்பள்ளி, நாயக்கனேரிமலை, பாம்புகாரன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் தெரிவித்ததாவது:
நாங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வசித்து வருகிறோம். வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வருபவா்களுக்கு, வனஉரிமை சட்டத்தின்கீழ் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கடந்த 2023-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி விண்ணப்பம் அனுப்பினோம். வனஉரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் மீதான கோட்ட அளவிலான கூட்டம் 15.11.2024-ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகம், ஒசூா் துணை ஆட்சியா் அலுவலகத்திலும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வீட்டுமனைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட வனக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. ஆனால், இதுவரையில், அந்த பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வனஉரிமைச் சட்டம் 2006-இன்படி வனநிலத்தில் வசிக்கவும், விவசாயம் செய்வதற்கும் தனிநபா் உரிமை சட்ட உரிமை உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கான தனிநபா் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு வனஉரிமைச் சட்டத்தின்கீழ் வீடு மற்றும் விவசாய செய்யும் நிலத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தா்னாவில் ஈடுபட்ட பழங்குடியினரிடம் போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.