செய்திகள் :

2 குழந்தைகள் உள்பட 4 உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது ஹமாஸ்!

post image

போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

காஸா போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேலைச் சேர்ந்த 6 பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 4 பேரின் உடல்களை வியாழக்கிழமை அனுப்புகிறது.

முன்பு 3 பேரை மட்டுமே விடுவிப்பதாக இருந்த நிலையில், 6 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான கலீல் அல்-ஹய்யா விடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிபாஸ் குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் வியாழக்கிழமை ஒப்படைக்கவுள்ளதை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். பலர் பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் இஸ்ரேலில் வசித்துவரும் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிபாஸ் குடும்பத்தினரும் அடங்குவர். (சிறைபிடிக்கப்பட்டபோது) 9 மாதக் குழந்தை க்ஃபிர் பிபாஸ், 4 வயது குழந்தை ஏரியல், 32 வயது தாய் ஷிரி மற்றும் அவரின் கணவர் யார்டென் (34) ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதில், தாய் ஷிரியும் அவரின் குழந்தைகளான க்ஃபிர் பிபாஸ், ஏரியல் ஆகியோர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. மேலும், தந்தை யார்டென் உயிருடன் இருக்கும் விடியோவையும் வெளியிட்டிருந்தது. அதில், எனது குடும்பம் அழிந்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவே காரணம் எனக் கூறியிருந்தார்.

இது குறித்து அப்போது விளக்கம் அளித்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் உளவியல் ரீதியாக யார்டெனுக்கு தொல்லை கொடுத்துள்ளதாகவும், பிபாஸ் குடும்பத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களை இஸ்ரேல் அரசிடம் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க