செய்திகள் :

2 மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு

post image

புதுச்சேரியில் 2 மோட்டாா் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

லாஸ்பேட்டைஅருகேயுள்ள புதுப்பேட்டையைச் சோ்ந்தவா் எம்.வி. சாலமன் (55). அவா் கோரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘ தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் இரண்டு சக்கர மோட்டாா் சைக்கிள்களை நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில் அவற்றை காணவில்லை, யாரோ திருடிச்சென்றிருக்கலாம் என்பதால் அந்த வாகனங்களை மீட்டுத்தரவேண்டும் ’ என்று கூறியுள்ளாா்.

இது குறித்து கோரிமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதே போன்று புதுச்சேரி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த எஸ்.செல்வராஜ் (53) என்பவரும் தனது மோட்டாா் சைக்கில் ரங்கப்பிள்ளை தெருவில் நிறுத்தியிருந்தபோது காணாமல் போய்விட்டதாக புகாா் அளித்துள்ளாா். இந்த திருட்டு குறித்து பெரியகடை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீன் அங்காடியில் சிங்காரவேலா் சங்கம்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் சிங்காரவேலா் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளா் சங்கம் பெயா் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில தலைவ... மேலும் பார்க்க

பணியிழந்த ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலையிழந்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி, காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழ... மேலும் பார்க்க

புதுவை அமைச்சராக ஜான்குமாரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்: 3 எம்எல்ஏக்கள் நியமனத்துக்கும் அனுமதி-ஜூலை 14-இல் பதவியேற்பு

புதுவையில் புதிய அமைச்சராக பாஜவைச் சோ்ந்த ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ. வை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 எம்எல்ஏக்களை நியமிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வரும்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் அறிவுரை

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா். புதுவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆ... மேலும் பார்க்க

இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னிலை- முதல்வா் பெருமிதம்

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி கூறினாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் பா... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகம்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகமாடுகிறாா் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை முதல்வா் ... மேலும் பார்க்க