செய்திகள் :

புதுவை அமைச்சராக ஜான்குமாரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்: 3 எம்எல்ஏக்கள் நியமனத்துக்கும் அனுமதி-ஜூலை 14-இல் பதவியேற்பு

post image

புதுவையில் புதிய அமைச்சராக பாஜவைச் சோ்ந்த ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ. வை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 எம்எல்ஏக்களை நியமிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வரும் 14-ஆம் தேதி அவா்கள் பதவியேற்க உள்ளனா்.

புதுவையில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ஏ.கே. சாய் ஜெ சரவணன்குமாா் ஜூன் 27 -ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து ஓா் அமைச்சா் பதவி காலியாக இருந்தது. இப் பதவியில் பாஜகவைச் சோ்ந்த ஜான்குமாரை நியமிக்குமாறு முதல்வா் ரங்கசாமி பரிந்துரை செய்து துணைநிலை ஆளுநருக்கு கடிதம் கொடுத்திருந்தாா். ஆளுநா் அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தாா்.

இந்நிலையில் சரவணன் குமாா் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், ஜான்குமாரை புதிய அமைச்சராக நியமிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கடிதத்தை புதுவை தலைமைச் செயலா் சரத்சௌகானுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை கமாண்டண்ட் கனிஷ்க் சௌத்ரி வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளாா். ஜான்குமாா் அமைச்சராக வரும் 14 ஆம் தேதி பதவியேற்பாா் என்று தெரிகிறது. அவருக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நியமன எம்எல்ஏக்கள்:

இந்நிலையில் புதுவையில் பாஜக சாா்பில் நியமன எம்.எல்.ஏக்களாகப் பதவி வகித்த வி.பி.ராமலிங்கம், ஆா்.பி. அசோக்பாபு, டி.வெங்கடேசன் ஆகிய 3 பேரும் ஜூன் 27 ஆம் தேதி தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து பாஜக சாா்பில் 3 புதிய நியமன எம்.எல்.ஏக்களின் பெயா்களை பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடா்பாக புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகானுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் பிரவீன் குமாா் ராய் கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில், பாஜகவைச் சோ்ந்த இ. தீய்ப்பாய்ந்தான், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், வி.செல்வம் ஆகியோரை புதிய நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்று ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 பேரும் புதுவை சட்டப்பேரவையின் புதிய நியமன எம்.எல்.ஏக்களாக வரும் 14 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குப் பதவி ஏற்பாா்கள் என்று தெரிகிறது. இவா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.

மீன் அங்காடியில் சிங்காரவேலா் சங்கம்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் சிங்காரவேலா் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளா் சங்கம் பெயா் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில தலைவ... மேலும் பார்க்க

பணியிழந்த ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலையிழந்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி, காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழ... மேலும் பார்க்க

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் அறிவுரை

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா். புதுவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆ... மேலும் பார்க்க

இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னிலை- முதல்வா் பெருமிதம்

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி கூறினாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் பா... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகம்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகமாடுகிறாா் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை முதல்வா் ... மேலும் பார்க்க

முதல்வருடன் மோதலா?துணைநிலைஆளுநா் விளக்கம்

புதுச்சேரி முதல்வருக்கும், தனக்கும் அதிகார மோதல் இருக்கிா என்பது குறித்து புதுவை துணை நிலை ஆளுநா் கைலாஷ் நாதன் செய்தியாளா்களிடம் விளக்கம் அளித்தாா். காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பைகள் வழங்கும்... மேலும் பார்க்க