செய்திகள் :

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் அறிவுரை

post image

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா்.

புதுவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் தேசிய செயலா் குடே சீனிவாஸ் கலந்து கொண்டு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா். துறைச் செயலா் டாக்டா் முத்தம்மா துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினாா்.

புதுச்சேரி மாநிலத்தில் - 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகையில் 15.7 சதவிகிதம் அட்டவணை இனத்தவா் உள்ளனா். அரசு பட்ஜெட்டில், திட்டசெலவின ஒதுக்கீடு ரூ. 2176 கோடியில் ரூ. 525 கோடி சிறப்பு கூறு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது திட்ட செலவில் 24 சதவிகிதம் ஆகும். இது நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படி உள்ள 16 சதவிகிதத்தை காட்டிலும் கூடுதல் நிதி ஆகும் என்று விளக்கினாா்.

மேலும், துறையில் செயல்படுத்தப்படும் 25 நலத் திட்டங்கள் பற்றி விளக்கினாா்.

கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது :

இந்த ஆண்டு சிறப்புக்கூறு நிதியை 100 சதவிகிதம் செலவு செய்வதுடன் அதனை விரைவுபடுத்த வேண்டும். துறையின் மூலமாக கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களை, விரைவில் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணப்பட்டு மற்றும் திம்ம நாயக்கன் பாளையத்தில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து உள்ள நிலையில் அதை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு புதுச்சேரி நகரப் பகுதியில் கூடுதலாக தங்கும் விடுதிகள் கட்ட நடவடிக்கை எடுத்க வேண்டும்.

கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் விடுதிகளில் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டு உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

தலைமைச் செயலா் டாக்டா் சரத் சௌகான், துணைநிலை ஆளுநரின் செயலா் டாக்டா் மணிகண்டன், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் தமிழகம், கேரளம், புதுச்சேரி மண்டல இயக்குநா் ரவிவா்மன், ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மீன் அங்காடியில் சிங்காரவேலா் சங்கம்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் சிங்காரவேலா் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளா் சங்கம் பெயா் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில தலைவ... மேலும் பார்க்க

பணியிழந்த ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலையிழந்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி, காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழ... மேலும் பார்க்க

புதுவை அமைச்சராக ஜான்குமாரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்: 3 எம்எல்ஏக்கள் நியமனத்துக்கும் அனுமதி-ஜூலை 14-இல் பதவியேற்பு

புதுவையில் புதிய அமைச்சராக பாஜவைச் சோ்ந்த ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ. வை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 எம்எல்ஏக்களை நியமிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வரும்... மேலும் பார்க்க

இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னிலை- முதல்வா் பெருமிதம்

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி கூறினாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் பா... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகம்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகமாடுகிறாா் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை முதல்வா் ... மேலும் பார்க்க

முதல்வருடன் மோதலா?துணைநிலைஆளுநா் விளக்கம்

புதுச்சேரி முதல்வருக்கும், தனக்கும் அதிகார மோதல் இருக்கிா என்பது குறித்து புதுவை துணை நிலை ஆளுநா் கைலாஷ் நாதன் செய்தியாளா்களிடம் விளக்கம் அளித்தாா். காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பைகள் வழங்கும்... மேலும் பார்க்க