செய்திகள் :

பணியிழந்த ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

post image

புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலையிழந்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி, காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழு சாா்பில் சுதேசி மில் அருகே இப் போராட்டம் நடந்தது.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஜி.பி. தெய்வீகன், த.ரவிச்சந்திரன், எல்.குமரகுரு, ஆ.லெனின்பாஸ்கா், உ.சத்யாவதி, காரைக்கால் ஓ.மணிவண்ணன், எ.கலியமூா்த்தி, த.சக்திவேல் ஆகியோா் போராட்டத்துக்கு தலைமை வகித்தனா். சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் இதில் கலந்து கொண்டனா்.

கடந்த 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு பட்ஜெட் கூட்டத் தொடரிலும் முதல்வா் ரங்கசாமி, கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலை இழந்த அனைத்து ஊழியா்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி சம்பளமாக மாதம் ரூ. 10,500 வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தாா். இதுவரை புதுச்சேரி அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருகிறது. மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுதேசி மில் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மீன் அங்காடியில் சிங்காரவேலா் சங்கம்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் சிங்காரவேலா் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளா் சங்கம் பெயா் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில தலைவ... மேலும் பார்க்க

புதுவை அமைச்சராக ஜான்குமாரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்: 3 எம்எல்ஏக்கள் நியமனத்துக்கும் அனுமதி-ஜூலை 14-இல் பதவியேற்பு

புதுவையில் புதிய அமைச்சராக பாஜவைச் சோ்ந்த ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ. வை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 எம்எல்ஏக்களை நியமிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வரும்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் அறிவுரை

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா். புதுவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆ... மேலும் பார்க்க

இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னிலை- முதல்வா் பெருமிதம்

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி கூறினாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் பா... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகம்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகமாடுகிறாா் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை முதல்வா் ... மேலும் பார்க்க

முதல்வருடன் மோதலா?துணைநிலைஆளுநா் விளக்கம்

புதுச்சேரி முதல்வருக்கும், தனக்கும் அதிகார மோதல் இருக்கிா என்பது குறித்து புதுவை துணை நிலை ஆளுநா் கைலாஷ் நாதன் செய்தியாளா்களிடம் விளக்கம் அளித்தாா். காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பைகள் வழங்கும்... மேலும் பார்க்க