செய்திகள் :

2-வது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை!

post image

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.

ரிஷப் பந்த் சாதனை

6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூன் 23) சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 202 பந்துகளில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த்தும் சதம் விளாசி அசத்தினார். அவர் 130 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

அதிரடியாக விளையாடிய அவர் 140 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் ரிஷப் பந்த். இதன் மூலம், இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி ஒன்றின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 7-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த், முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 10 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள், 10 ஆண்டுகளாக விளையாடுகிறேன்: பும்ரா

விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன்மூலம், இந்திய... மேலும் பார்க்க

முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க

சதம் விளாசிய கே.எல்.ராகுல்; வலுவான நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த... மேலும் பார்க்க

என்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது; சௌரவ் கங்குலி வருத்தம்!

தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட... மேலும் பார்க்க

பிளேயிங் லெவனில் இடம் பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை: ஆலி போப்

பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஆலி போப் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் ஆலி போப் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொ... மேலும் பார்க்க

10 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள், 10 ஆண்டுகளாக விளையாடுகிறேன்: பும்ரா

இந்திய அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடுவது குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க