களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது!
2-வது ஒருநாள் போட்டிக்காக கட்டாக் வந்தடைந்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கட்டாக் வந்தடைந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நாளை (பிப்ரவரி 9) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி இன்று கட்டாக் வந்தடைந்தது.
Nagpur ✅
— BCCI (@BCCI) February 8, 2025
Hello Cuttack! #TeamIndia have arrived for the 2nd #INDvENG ODI @IDFCFIRSTBankpic.twitter.com/XhdtAixiyF
புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு வந்தடைந்த இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய அணி வீரர்கள் கட்டாக் வந்தடைந்த விடியோ பிசிசிஐ தரப்பில் பகிரப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!
நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது.
முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி, நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.