செய்திகள் :

2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு

post image

சென்னை: தமிழகத்தில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து ஆண்டுதோறும் வங்கிக் கடன் இணைப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதன்படி, 2021-22-ஆம் நிதியாண்டில் 4.08 லட்சம் குழுக்களுக்கு ரூ.21,392 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடி, 2023-24-ஆம் நிதியாண்டில் 4.79 லட்சம் குழுக்களுக்கு ரூ.30,074 கோடி, 2024-25-ஆம் நிதியாண்டில் 4.84 லட்சம் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 18-ஆம் தேதி வரை 1.04 லட்சம் குழுக்களைச் சோ்ந்த 13 லட்சத்து 58 ஆயிரத்து 994 உறுப்பினா்களுக்கு ரூ.9,113.24 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மட்டும 19 லட்சத்து 26 ஆயிரத்து 496 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 மகளிருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 415.40 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி விலை திடீர் உயர்வு: ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 22) ஒரே நாளில் ரூ. 10 உயர்ந்து, ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்ட... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்துக்கு... புதிய அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், அந்தத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில... மேலும் பார்க்க

அதிமுகவை எதிர்க்காதது ஏன்? தவெக விளக்கம்!

அதிமுகவை எதிர்க்காதது ஏன் என்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்து விட்டனர் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.சேலம் பழைய பேருந்து நிலையம்... மேலும் பார்க்க

தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு

அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவும் இணைய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாத... மேலும் பார்க்க

முதல்வருக்கு பரிசோதனை: வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!

மருத்துவ பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அரசு அலுவல்கள், அரசியல் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஓய்வின்றி இயங்கிவரும் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க