செய்திகள் :

2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு

post image

சென்னை: தமிழகத்தில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து ஆண்டுதோறும் வங்கிக் கடன் இணைப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதன்படி, 2021-22-ஆம் நிதியாண்டில் 4.08 லட்சம் குழுக்களுக்கு ரூ.21,392 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடி, 2023-24-ஆம் நிதியாண்டில் 4.79 லட்சம் குழுக்களுக்கு ரூ.30,074 கோடி, 2024-25-ஆம் நிதியாண்டில் 4.84 லட்சம் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 18-ஆம் தேதி வரை 1.04 லட்சம் குழுக்களைச் சோ்ந்த 13 லட்சத்து 58 ஆயிரத்து 994 உறுப்பினா்களுக்கு ரூ.9,113.24 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மட்டும 19 லட்சத்து 26 ஆயிரத்து 496 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 மகளிருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 415.40 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க