செய்திகள் :

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

post image

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வழங்கியிருக்கும் தகவலில், மேற்கு பிரான்சில் மருத்துவராக 25 ஆண்டுகளாகப் பணியாற்றியவர் ஜோயல் லு ஸ்கௌர்னெக். இவரிடம் மருத்துவ சிகிச்சைக்காக வரும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 300 பேரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கிறார்.

Joel Le Scouarnec
Joel Le Scouarnec

சிலருக்கு மயக்க மருந்து கொடுத்தும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த வழக்கு பிரான்சை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, `என் செயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன். அதனால், நான் மேல் முறையீடு செய்யக் கோரப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் செய்ய விரும்புகிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ``உங்கள் செயல்கள் மருத்துவ உலகில் ஒரு கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. உங்கள் சக ஊழியர்களான மருத்துவ அதிகாரிகளால்கூட உங்கள் செயல்களைத் தடுக்க முடியவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. எனவே, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தூத்துக்குடி: ஒருமணி நேரத்தில் நடந்த இரட்டைக்கொலை; முன் விரோதம் காரணமா? பழிக்குப்பழியா?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர்நகரைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி செய்து விட்டு ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க