செய்திகள் :

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

post image

வெளிநாடுகளிலிருந்து அதிதிறன் பெற்ற ஊழியர்கள், அமெரிக்கா செல்வதற்கு மேலும் ஒரு தடைக்கல்லை அமெரிக்க குடியுரிமைத் துறை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 2025ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட முன்னுரிமை (இபி-1) கிரீன் கார்டு வழங்கும் எண்ணிக்கை நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது முன்னுரிமை (இபி-2) விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்ட நிலையில், இபி-1 கிரீன் கார்டு வழங்குவதற்கான கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினால், நடப்பு ஆண்டில், இபி-1 மற்றும் இபி-2 விசா பிரிவின் கீழ் யாருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது என்றும், இதற்கான காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விசா விண்ணப்பங்கள் 2025 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பினால், இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், இபி-1 க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து அதிக காலம் காத்திருப்பவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

எனவே, அக்டோபர் 1ஆம் தேதி இபி-1 மற்றும் இபி-2 விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். முன்னதாக சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் முன்கூட்டியே பரிசீலிக்கப்பட்டாலும், அவர்கள் விண்ணப்பித்த இடங்களுக்கு ஏற்ப அது வரிசைப்படுத்தப்படும்.

இந்த விசாவுக்கான முன்னுரிமை தேதியை அடிப்படையாகக் கொண்டே இதன் தகுதியும் முக்கியத்துவம் பெறுகிறது.

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா். முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட... மேலும் பார்க்க

நேபாள பிரதமா் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு அமைச்சா்கள் வீடுகள் சூறை

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். இளைஞா்களின் வன்முறைப் போராட்டத்தில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றத்துக்கு தீ ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது- டிரம்ப் ஆலோசகா் நவாரோ கருத்து

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் ... மேலும் பார்க்க

முன்னாள் அதிபா்களுக்கான சலுகைகள் பறிப்பு

இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய... மேலும் பார்க்க

நாா்வே தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி

நாா்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜோனாஸ் காா் ஸ்டோரின் தொழிலாளா் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, 28 சதவீத வாக்குகளைப் பெற்... மேலும் பார்க்க