செய்திகள் :

2026 இறுதிக்குள் நாட்டின் ஏற்றுமதி 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும்!

post image

2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் வணிகப் பொருள்கள் ஏற்றுமதி மட்டும் 525 முதல் 535 மில்லியன் டாலராக இருந்தது. அதாவது முந்தைய ஆண்டை விட இது 12% அதிகமாகும். இதேபோன்று சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் 465 முதல் 475 பில்லியன் டாலராக இருந்தது. இது 20% வளர்ச்சியாகும்.

2024 - 25 நிதியாண்டில் ஏற்றுமதி துறையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 824.9 பில்லியன் டாலராக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது 778.1 பில்லியனாக இருந்தது. இது 6.01% உயர்வாகும்.

2025 நிதியாண்டில் மட்டும் சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் 13.6% அதிகரித்து 387.5 பில்லியனாக உள்ளது. தொழில்நுட்பத் துறை, தொழில் துறை, நிதி பயணங்கள் தொடர்பான சேவைகளின் சிறந்து விளங்கியமையால் சேவைத் துறையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.

வணிக பொருள்கள் ஏற்றுமதி 437.4 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருள்கள் அல்லாத சரக்குகள் ஏற்றுமதி 374.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6% உயர்வாகும்.

சரக்கு மற்றும் சேவைகள் துறை ஏற்றுமதியில் நாடு தொடர்ந்து நிலையான வளர்ச்சியை எட்டி வருவதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரால்ஹன் தெரிவித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்புப் பொருள்களின் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையிலான வழிகாட்டுதல்களை அரசு செய்துகொடுத்தால், உள்நாட்டுத் தயாரிப்புகள் மேலும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார்.

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க