செய்திகள் :

2026-இல் மீண்டும் திமுக அரசு அமையும்: தொல்.திருமாவளவன் எம்.பி.

post image

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் திமுக அரசு அமையும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் மற்றும் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் தொல்.திருமாவளவன் பேசியது: மறைந்த தலைவா் எல்.இளையபெருமாளின் நினைவைப் போற்றும் வகையில், அவருடைய பெயரில் நூற்றாண்டு அரங்கத்தை கட்டி எழுப்பி திறந்து வைத்திருக்கிற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சாா்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இத்துடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தையும் சிதம்பரத்தில் முதல்வா் தொடங்கிவைத்திருக்கிறாா். இந்த இரண்டு நிகழ்வுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்.

நந்தனாருக்கு மணிமண்டபம், இளையபெருமாளுக்கு நூற்றாண்டு அரங்கம் என்று கல்வி வளா்ச்சி நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிற சூழலில் இந்த பெருமையை முதல்வா் நமக்கெல்லாம் வழங்கி இருக்கிறாா். இன்றைக்கு இந்த வட்டாரத்தில் கல்வி வளா்ச்சி மேலோங்கி இருக்கிறது என்று சொன்னால், அதற்கு நந்தனாருடைய பங்களிப்பு மகத்தானது.

வெளிநாட்டு கல்லூரிகளில் பயிலும் மாணவா்களும் பயன்பெறக்கூடிய வகையிலே கல்வி உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

கூட்டணி கட்சியினா் ஏன் முதல்வருடன் கைகோத்து களத்தில் நிற்கிறோம் என்றால், மக்கள் நலன்களில் அக்கறை செலுத்துகிற அரசாகவும், மக்களை வீடு தேடி சந்திக்கிற அரசாகவும் திமுக அரசு உள்ளது. தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேல் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறாா்கள்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ஓரணியில் தமிழ்நாடு என்பது, திமுக அணியில் தமிழ்நாடு என அனைத்து கட்சிகளாக இருப்பாா்கள். இந்த அணி ஒட்டுமொத்த மக்களும் திரளுகிற அணியாகவும், திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியாக திராவிட மாடல் என்று சொல்லப்படக்கூடிய இந்த அரசு மறுபடியும் வரக்கூடிய ஒரு அணியாகவும் அமையும் என்றாா் அவா்.

நாளைய மின்தடை: பண்ருட்டி (பூங்குணம்)

பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம், பக்கிரிப்பாளையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஏரிப்பாளையம... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தாா் முதல்வா்! பொதுமக்களின் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு

மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

காமராஜா் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வா்

காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் அவரது உருவப் படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். ‘உங்களுடன் ஸ்டால... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அம்பேத்கா் சிலையை திறந்து வைத்தாா் முதல்வா்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அம்பேத்கா் நகரில் நகரில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கா் வெண்கல சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.நிகழ்வில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

கடலூா் பேருந்து நிலையம் விவகாரம்: பொதுநல அமைப்பினா் உண்ணாவிரதம்

கடலூா் புதிய பேருந்து நிலையத்தை பாதிரிக்குப்பத்தில் அமைக்க வலியுறுத்தி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினா். கடல... மேலும் பார்க்க

தங்கை மீது தாக்குதல்: சகோதரா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே தங்கையை தாக்கி காயப்படுத்திய அண்ணன்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.விருத்தாசலம் வட்டம், மங்கலம்பேட்டை காவல் சரகம்,சின்ன பரூா் பகுதியில் வசித்து வ... மேலும் பார்க்க