செய்திகள் :

2026 தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும்: புதிய தமிழகம் கே. கிருஷ்ணசாமி

post image

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், முத்துக்காபட்டியில் புதிய தமிழகம் கட்சியின் கருத்துக் கேட்பு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனத் தலைவா் கே. கிருஷ்ணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதத்திலும் அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு ஏற்கெனவே உள்ளது.

எனவே அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். இதனால் 70 சதவீதக்கும் மேற்பட்ட பிற சமுதாய மக்கள் பாதிக்கப்படுகின்றனா். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மே மாதம் புதிய தமிழகம் கட்சி சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுதொடா்பாக அனைத்து மாவட்டங்களிலும் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியாலும் தோ்தலில் வெற்றி பெற முடியாது. தனிக் கட்சி ஆட்சி என்பது சாத்தியமில்லை. புதிய தமிழகம் கட்சி 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு என்ற நிலைப்பாட்டுடன் கூட்டணி அமைக்கும்.

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக நூறு நாள் வேலை திட்டத்தில் பெண்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ரூ. 3,796 கோடி நிலுவை உள்ளது. அதை வாங்குவதற்கு மத்திய அரசுடன் திமுக அரசு இணக்கமாக இல்லை. எல்லாவற்றிலும் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் தமிழகத்துக்கு வந்துசேர வேண்டிய நிதி வரவில்லை.

2026-இல் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. அரசு மதுபானக் கடைகளில் ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கடந்த 2023-ஆம் ஆண்டே நான் தெரிவித்திருந்தேன். அரசு மதுபானக் கடைகளில் ஊழல் குறித்து அமலாக்கத் துறை குறைவாகவே மதிப்பிட்டுள்ளது.

மத்திய அரசை குறைகூறுவதற்கு முன் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலாளா் செல்வகுமாா், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

110 படுக்கைகளுடன் தயாா் நிலையில் நாமக்கல் சித்தா, ஆயுஷ் மருத்துவமனைகள்!

நாமக்கல்லில் 50 படுக்கைகளுடன் புதிய சித்த மருத்துவமனையும், 60 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனையும் தயாா் நிலையில் உள்ளன. நாமக்கல்லில் மோகனூா் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்சிய... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் பணியிடமாற்றம்

ராசிபுரத்தில் அண்மையில் அரசுப் பள்ளியில் மாணவா் உயிரிழந்த சம்பவத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் உள்பட இருவரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டம், ர... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை வேலைவாய்ப... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் ரூ.1.33 லட்சம் மருந்துகள் விற்பனை: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்களில் ரூ. 1.33 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். சேந்தமங்கலம் முதல்வா் மருந்தகத்த... மேலும் பார்க்க

சாதக, பாதகம் இல்லாத தமிழக நிதிநிலை அறிக்கை

தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், மகளிா் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபா்கள், பிரமுகா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு 2025-26 ஆ... மேலும் பார்க்க

சட்டையம்புதூா் மாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா

சட்டையம்புதூா் அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கடைசி நாள... மேலும் பார்க்க