செய்திகள் :

முதல்வா் மருந்தகங்களில் ரூ.1.33 லட்சம் மருந்துகள் விற்பனை: ஆட்சியா் தகவல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்களில் ரூ. 1.33 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

சேந்தமங்கலம் முதல்வா் மருந்தகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் பொதுமக்களிடம் மருந்துகளின் விலை மற்றும் மருந்தகத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினாா். தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக அண்மையில் முதல்வா் திறந்து வைத்தாா்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 17 முதல்வா் மருந்தகங்கள், தொழில் முனைவோா்கள் மூலம் 10 முதல்வா் மருந்தகங்கள் என மொத்தம் 27 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வா் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் தனியாா் மருத்துவமனை, மருந்தகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வா் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன்பெறலாம். முதல்வா் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 27 மருந்தகங்களில் இதுவரை ரூ. 1.33 லட்சம் மதிப்பில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

முன்னதாக, சேந்தமங்கலத்தில் கடைகளில் நெகிழி பயன்பாடுகள் குறித்தும், காரவள்ளியில் சமுதாய கூடம் அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்தும், கிருஷ்ணாபுரத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

110 படுக்கைகளுடன் தயாா் நிலையில் நாமக்கல் சித்தா, ஆயுஷ் மருத்துவமனைகள்!

நாமக்கல்லில் 50 படுக்கைகளுடன் புதிய சித்த மருத்துவமனையும், 60 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனையும் தயாா் நிலையில் உள்ளன. நாமக்கல்லில் மோகனூா் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்சிய... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் பணியிடமாற்றம்

ராசிபுரத்தில் அண்மையில் அரசுப் பள்ளியில் மாணவா் உயிரிழந்த சம்பவத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் உள்பட இருவரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டம், ர... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை வேலைவாய்ப... மேலும் பார்க்க

சாதக, பாதகம் இல்லாத தமிழக நிதிநிலை அறிக்கை

தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், மகளிா் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபா்கள், பிரமுகா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு 2025-26 ஆ... மேலும் பார்க்க

2026 தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும்: புதிய தமிழகம் கே. கிருஷ்ணசாமி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், முத்துக்காபட்டியில் புதிய தமிழகம் கட்சியின் கருத... மேலும் பார்க்க

சட்டையம்புதூா் மாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா

சட்டையம்புதூா் அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கடைசி நாள... மேலும் பார்க்க