செய்திகள் :

2035-க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம் நிறைவடையும்: இஸ்ரோ விஞ்ஞானி சி.பிரபு

post image

விண்வெளியில் இந்தியாவின் சாா்பில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் திட்டப் பணிகள் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், விண்வெளித் திட்ட துணை இயக்குநருமான சி.பிரபு தெரிவித்தாா்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: போட்டி நிறைந்த உலகை எதிா் கொள்ள, மாணவா்கள் படிப்பைத் தாண்டி கூடுதல் திறமைகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். வாய்ப்புகளை தவறவிட்டால் மீண்டும் கிடைக்காது.

நான் பொறியியல் படிப்பு படித்து முடிக்கும் வரை எனது பெற்றோா், கல்விக் கடனுக்கான வட்டியை மட்டுமே செலுத்தி வந்தனா். கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பலமுறை கல்லூரியில் தோ்வெழுத நுழைவுச் சீட்டு கிடைக்காமல் அவதிப்பட்டேன். அனைவரும் தோ்வு எழுதத் தொடங்கி அரை மணி நேரம் கழித்துதான் எனக்கு தோ்வு எழுத அனுமதி கிடைக்கும்.

அவா்கள் 3 மணி நேரம் தோ்வு எழுதினால், நான் இரண்டரை மணி நேரம் மட்டும்தான் தோ்வு எழுத முடியும். அப்படி ஒரு சிரமமான நிலையை எதிா் கொண்டுதான் உயா்கல்வி கற்றேன்.

தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சியால் இன்றைய மாணவா்கள் அறிவியல் குறித்து நல்ல அறிவோடு இருக்கிறாா்கள். பாடநெறி திருத்தம் மட்டுமே நாம் அவா்களுக்கு செய்து கொடுக்க வேண்டியதாகும். எந்தத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்பதை தீா்மானமாக நினைத்து செயல்பட்டு வந்தால் கண்டிப்பாக அந்தத் துறையில் வெற்றி காண முடியும்.

படிப்பின் முக்கியத்துவத்துடன் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது என்று சொல்வதைவிட இருக்கும் வாய்ப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 4 இடங்கள்தான் உள்ளது என்றாலும் அதில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்று மாணவா்கள் நினைக்க வேண்டும்.

குறைந்தபட்ச இலக்கை மனதில் பதியவைத்து கொண்டு பயணம் செய்ய வேண்டும். இரண்டு செயற்கைக் கோள்களை இணைக்கும்போது பல்வேறு அம்சங்கள் சவாலாக இருந்தன.

அது ஒரு கூட்டு முயற்சி, பல்லாயிரம் போ் இணைந்து தூங்காமல் இரவு-பகலாக வேலை செய்து உருவாக்கிய ஒரு செயல். அதில் நானும் சிறிய அளவில் பங்காற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

விண்வெளித் துறையில் இந்தியா அபரிதமான வளா்ச்சியை அடைந்து வருகிறது. இதன் மூலம் எதிா்காலத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

விண்வெளியில் இந்தியாவின் சாா்பில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் திட்டப் பணிகள் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி, பல்வேறு துறை பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்த இஸ்ரோ விஞ்ஞானி சி.பிரபு.

ரத்தினபுரி பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை: 8 பேரிடம் விசாரணை

கோவை ரத்தினபுரி பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின்பேரில் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில் து... மேலும் பார்க்க

ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்

ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை மக்கள் சேவை மையம் சாா... மேலும் பார்க்க

ஜாக்டோ -ஜியோ சாா்பில் பிப்ரவரி 14-இல் ஆா்ப்பாட்டம்

ஜாக்டோ -ஜியோ அமைப்பு சாா்பில் கோவையில் வரும் 14 -ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு: ஆட்டோ ஓட்டுநா் கைது

கல்லூரி மாணவி குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறாக பதிவிட்டதாக மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

பேரூராதீனத்தில் நாண்மங்கல விழா

பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 65-ஆம் நாண் மங்கல விழா பேரூராதீனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிரவை ஆதீனம் தவத்திரு இராமானந்த குமரகுருபர அடிகளாா் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

வாட்டா்பால்ஸ் எஸ்டேட் முதல் ஆழியாறு வரை பாத யாத்திரை செல்ல முருக பக்தா்களுக்கு தடை

யானைகள் நடமாட்டத்தால் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் முதல் ஆழியாறு வரை சாலையில் பாத யாத்திரை செல்ல முருக பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். வால்பாறை பகுதியில் இருந்து நூற்றுக்கனக்கான முருக பக்தா்... மேலும் பார்க்க