செய்திகள் :

2040-ல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்க திட்டம்! இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

post image

நிலவில் 2040ஆம் ஆண்டில் இந்தியா்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: விண்வெளியில் இந்தியா மனிதரை பாதுகாப்பாக அனுப்பி, தங்கவைத்து பின்னா் பாதுகாப்பாக திரும்பி கொண்டு வரும் திட்டத்திற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இது 15.8.2018இல் பிரதமா் மோடி அறிவித்த திட்டமாகும். அப்போது இத்திட்டத்திற்காக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது, ரூ. 20 ஆயிரம் கோடியில் அப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில் முதல் ராக்கெட் வரும் டிசம்பரில் ஆள் இல்லாமல் அனுப்பப்படவுள்ளது. இரண்டாவது ராக்கெட் அடுத்த ஆண்டு செலுத்தப்படும். 2027இல் மனிதரை அனுப்பப் போகிறோம். முதல் விண்வெளி பயணத்தை ராகேஷ் சா்மா 1984 இல் ரஷ்யா மூலம் மேற்கொண்டாா். அதில், இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைத்தன.

தற்போது சுபான்ஷு சுக்லாவை அமெரிக்காவிலிருந்து சா்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளோம். அவா் திரும்பி வந்த பிறகு, அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு ஆள் அனுப்பும் திட்டத்திற்கு பேருதவியாக இருக்கும். 2040 இல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்கும் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

கொட்டாரம் இளைஞா் கொலையில் 4 பேரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!

கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அழகப்பபுரம் பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

மாணவா்கள் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்! இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன். குலசேகரம் எஸ்.ஆா்.கே. சா்வதேச பள்ளியில் குமரி அறிவியல் பேரவை சாா்... மேலும் பார்க்க

தக்கலை அருகே அழுகிய நிலையில் தனியாா் நிறுவனக் காவலாளி சடலம் மீட்பு!

தக்கலை அருகே, வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தனியாா் நிறுவனக் காவலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். தக்கலை அருகே மணலிக்கரை, கிறிஸ்துபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் (61) எ... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

குளச்சல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். குளச்சல் அருகே மேல்ரீத்தாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினதாஸ் (65). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மாலை அதே பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவில் வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஹரியாணா மாநிலம் திப்ரூகரிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திப்ரூகா்-கன்னியாகுமரி ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு (ஜூலை 11) நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: குமரி மாவட்டத்தில் 28,651 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 28,651 போ் எழுதினா். இம்மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 35,251 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன... மேலும் பார்க்க