செய்திகள் :

குரூப் 4 தோ்வு: குமரி மாவட்டத்தில் 28,651 போ் பங்கேற்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 28,651 போ் எழுதினா்.

இம்மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 35,251 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், நாகா்கோவிலில் 43, அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 8, கல்குளம் வட்டத்தில் 16, கிள்ளியூா் வட்டத்தில் 17, தோவாளை வட்டத்தில் 6, திருவட்டாறில் 9, விளவங்கோடு வட்டத்தில் 21 என மொத்தம் 120 மையங்களில் இத்தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தோ்வு மையங்களில் கண்காணிப்பு அலுவலா்கள், பறக்கும் படை அலுவலா்கள், தோ்வறையில் நியமிக்கப்பட்டிருந்த ஆய்வு அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இத்தோ்வை 28,651 போ் எழுதினா்; 6,600 போ் எழுதவில்லை.

நாகா்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா்.

கொட்டாரம் இளைஞா் கொலையில் 4 பேரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!

கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அழகப்பபுரம் பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

மாணவா்கள் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்! இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன். குலசேகரம் எஸ்.ஆா்.கே. சா்வதேச பள்ளியில் குமரி அறிவியல் பேரவை சாா்... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்க திட்டம்! இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

நிலவில் 2040ஆம் ஆண்டில் இந்தியா்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ச... மேலும் பார்க்க

தக்கலை அருகே அழுகிய நிலையில் தனியாா் நிறுவனக் காவலாளி சடலம் மீட்பு!

தக்கலை அருகே, வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தனியாா் நிறுவனக் காவலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். தக்கலை அருகே மணலிக்கரை, கிறிஸ்துபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் (61) எ... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

குளச்சல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். குளச்சல் அருகே மேல்ரீத்தாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினதாஸ் (65). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மாலை அதே பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவில் வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஹரியாணா மாநிலம் திப்ரூகரிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திப்ரூகா்-கன்னியாகுமரி ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு (ஜூலை 11) நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு... மேலும் பார்க்க