செய்திகள் :

210 தொகுதியில் வெற்றி! இபிஎஸ் சொல்வது பற்றி உதயநிதி பதில்!

post image

கரூர்: தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் கோவைச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர, பகுதி ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

திமுக மாவட்டச் செயலாளரும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.

கூட்டம் நிறைவடைந்து, கூட்டரங்கை விட்டு வெளியே வந்த தமிழக துணை முதல்வரிடம் செய்தியாளர்கள், தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் அளித்த அவர், அதற்காக நான் 220 தொகுதிகள் என்று சொல்ல வேண்டுமா? அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள்.

நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம். முதல்வர் மக்களை சந்தித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர் பணியை செய்து வருகிறார் என்றார் அவர்.

பேட்டியின்போது கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.

Deputy Chief Minister Udhayanidhi Stalin said in Karur that Edappadi Palaniswami is saying that he will win 210 seats in the elections, but the people will decide.

படகுகளில் தவெக என்று இருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? - விஜய் கண்டனம்

மீனவர்கள் தங்கள் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சே... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.விதிமீறல் கட்டடங்கள் தொ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அருகே மறுநடவு செய்து துளிர்த்து வந்த அரச மரத்துக்கு தீ வைப்பு!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் பகுதியில் மறு நடவு செய்யப்பட்டு, துளிர்த்துவந்த அரச மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அ... மேலும் பார்க்க

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடும் பணியை கிருஷ்ணகிரி மாவ... மேலும் பார்க்க

உள்ளாட்சியில் ஊழல்; திமுகவினரைக் காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி! - இபிஎஸ் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கு ந... மேலும் பார்க்க

பணி நேரத்தில் தூங்கியதால்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர்கள் பணியிடை நீக்கம்!

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர் பணியின்போது, நள்ளிரவில் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் அருகே... மேலும் பார்க்க