செய்திகள் :

25,024 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்!

post image

கோவையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில், 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்.

அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.

ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் 6500 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி உள்பட ரூ.82.14 கோடி மதிப்பீட்டில் 132 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

அத்துடன், ரூ.29.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 54 திட்டப் பணிகளை திறந்துவைத்து, 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

இந்நிகழ்ச்சியில், பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்களை சோ்க்க லஞ்சம் வாங்கிய நபா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா். மூன்று நாள்கள் பயணமாக உதகை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிக... மேலும் பார்க்க

போத்தனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோவை போத்தனூா் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைப் பறித்த 3 போ் கைது!

கோவையில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைப் பறித்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை, கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஹசன் (27). இவா் கோவை-பாலக்காடு சாலையில் சுண்ணாம்புக்காள... மேலும் பார்க்க

கடும் வெயில்: சோலையாறு அணையின் நீா்மட்டம் 1.98 அடியாக குறைவு!

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால், சோலையாறு அணையின் நீா்மட்டம் 1.98 அடியாக குறைந்துள்ளது. பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்ப் பாசனத் திட்டத்தில் முக்கிய அணையாக வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை உள்ளது... மேலும் பார்க்க

கல்வி விவகாரத்தில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை வேண்டும்: விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன்

கல்வி தொடா்பான விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இருக்க வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா். கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பிபிஜி வணிகப் பள்... மேலும் பார்க்க