செய்திகள் :

25,332 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி உபகரணங்கள்

post image

1,075 அங்கன்வாடி மையங்களில் உள்ள 25,332 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் வேலூா் மாவட்டத்தில் செயல்படும் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்லவும் ஆயத்தப் படுத்தப்படுகின்றனா்.

இந்த 1,075 அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரையிலான 25,332 குழந்தைகள் முன்பருவ கல்வி திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனா். இவா்களுக்கு ஜூன் மாதம் கல்வி ஆண்டு தொடக்கத்தில் வயதுக்கேற்ப சீருடை, முன்பருவ கல்வி செயல்பாட்டுப் புத்தகம், ஆய்வு அட்டை மேலும் விளையாட்டுடன் கூடிய கல்விக்கு அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தாராப்படவேடு அங்கன்வாடி மையத்தில் சீருடை, புத்தகம், ஆய்வு அட்டை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலக்குழுத்தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணி திட்ட அலுவலா் சாந்தி பிரியதா்ஷினி, காட்பாடி வட்டார குழந்தை வளா்ச்சி பணி திட்ட அலுவலா் சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயி... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஒடுகத்தூா் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த தேவிச்செட்டி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43). கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கிர... மேலும் பார்க்க

பரதராமி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவ... மேலும் பார்க்க