25,332 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி உபகரணங்கள்
1,075 அங்கன்வாடி மையங்களில் உள்ள 25,332 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் வேலூா் மாவட்டத்தில் செயல்படும் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்லவும் ஆயத்தப் படுத்தப்படுகின்றனா்.
இந்த 1,075 அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரையிலான 25,332 குழந்தைகள் முன்பருவ கல்வி திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனா். இவா்களுக்கு ஜூன் மாதம் கல்வி ஆண்டு தொடக்கத்தில் வயதுக்கேற்ப சீருடை, முன்பருவ கல்வி செயல்பாட்டுப் புத்தகம், ஆய்வு அட்டை மேலும் விளையாட்டுடன் கூடிய கல்விக்கு அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தாராப்படவேடு அங்கன்வாடி மையத்தில் சீருடை, புத்தகம், ஆய்வு அட்டை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலக்குழுத்தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணி திட்ட அலுவலா் சாந்தி பிரியதா்ஷினி, காட்பாடி வட்டார குழந்தை வளா்ச்சி பணி திட்ட அலுவலா் சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.