செய்திகள் :

3ஆம் நாள் முடிவு: 8 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை!

post image

காலேவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளில் இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது இலங்கை. அடுத்து விளையாடிய ஆஸி. 414 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி 62.1 ஓவர்கள் முடிவில் 211/8 ரன்கள் எடுத்தது. அத்துடன் 3ஆவது நாள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

ஆல்-ரவுண்டர் மிதவேகப் பந்துவீச்சாளரான பியூ வெப்ஸ்டர் சுழல்பந்து வீசி 1 விக்கெட் எடுத்து அசத்தினார். ஸ்மித்தின் கேப்டன்சியை (தலைமைப் பண்பு) வர்ணனையாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஆஸி. சார்பில் மேத்யூ குன்னஹ்மேன் 4, நாதன் லயன் 3, பியூ வெப்ஸ்டர் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.

3ஆம் நாள் முடிவில் இலங்கை அணியில் தற்போது குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

2ஆவது இன்னிங்ஸ் இலங்கை அணி ஸ்கோர் கார்டு

பதும் நிசாங்கா -8

திமுத் கருணரத்னே - 14

தினேஷ் சண்டிமால் - 12

ஏஞ்சலோ மேத்திவ்ஸ் - 76

கமிந்து மெண்டிஸ் - 14

தனஞ்செய டி செல்வா - 23

குசால் மெண்டிஸ் - 48*

ரமேஷ் மெண்டிஸ் - 0

பிரபாத் ஜெயசூர்யா - 6

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வேவுக்கு 292 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஜிம்பாப்வே அணிக்கு 292 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (பிப்ர... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்கு!

முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான ... மேலும் பார்க்க

2-வது போட்டியில் விளையாட விராட் கோலி தயார்; பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையி... மேலும் பார்க்க

2-வது ஒருநாள் போட்டிக்காக கட்டாக் வந்தடைந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கட்டாக் வந்தடைந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்ட... மேலும் பார்க்க

ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்... மேலும் பார்க்க

7,222 ரன்களுடன் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்..! மரியாதை செய்த ஆஸி. அணி!

இலங்கை வீரர் திமுத் கருணரத்னே தனது கடைசி டெஸ்ட்டில் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அன... மேலும் பார்க்க