செய்திகள் :

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

post image

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு விரைந்து முடிக்க விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி உத்தரவுப்படி, நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகள் குறித்த விவரங்களை காவல் துறை, வழக்குரைஞா்கள், வழக்குத் தொடுத்தவா்கள் வழங்க அறிவுறுத்தினாா்.

இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் புதுவை அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

மேலும், சமரசம் செய்யத்தக்க வழக்குகளை அடையாளம் கண்டு சமரசம் அல்லது மாற்றுமுறையில் வழக்கை முடித்து வைக்கலாம். தகுதியான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து காவல் துறைக்கு ஆலோசனை வழங்கப்படும். காசோலை மோசடி வழக்குகளில் சமரசம் செய்வது குறித்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

இதேபோல, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதிவுத் துறைக்கு உத்தரவிட்டாா்.

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கைக் கூடாது: உயா்நீதிமன்றம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தொடா்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவி... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகரின் முன்பிணை வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு

மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகா் ரவிச்சந்திரன் முன்பிணை கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க