செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரம்: திமுக முடிவை ஏற்போம்- வைகோ

post image

கோவை: குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரத்தில் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ, அதை ஏற்போம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை இரவு கூறியதாவது: காஸா பகுதியில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டுள்ளனா். காஸாவில் பாலஸ்தீன மக்கள் இனப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க பிரதமா் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலஸ்தீனத்தை முழுமையாக சுதந்திரம் பெற்ற அரசாக அங்கீகரிக்கிறோம் என ஐநா சபையின் பொதுக் குழுவில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக மகாராஷ்டிர மாநில ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. அவா் தமிழா், நல்ல பண்பாளா், அனைவரையும் மதிக்கக் கூடியவா். சி.பி. ராதாகிருஷ்ணன் அடுத்த கட்டத்தில் குடியரசுத் தலைவராகக்கூட வாய்ப்புகள் உள்ளன.

அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரத்தில் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ, அதை ஏற்போம்.

பிகாரில் மட்டும் 65 லட்சம் வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனா். இது ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என தோ்தல் ஆணையம் சொல்கிறது. வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட பெயா்கள் மீண்டும் இடம் பெற வேண்டும் என்றாா்.

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க