செய்திகள் :

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

post image

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் பாமக தலைமை நிலையத்தில், அக்கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் மருத்துவா் ச. ராமதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

பாமக மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் , பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்தவா்களை தோ்வு செய்து, அக்கட்சியின் நிறுவனா் மற்றும் தலைவருமான மருத்துவா் ச.ராமதாஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்களிடம் அறிமுகம் செய்து வைத்தாா்.

மேலும் கூட்டத்தில் அன்புமணி கட்சியின் விதிகளை மீறி செயல்படுவதாக கூறி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைந்த 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதத்தை பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி மருத்துவா் ச.ராமதாஸிடம் வழங்கினாா்.

இந்நிலையில், பாமக அமைப்பு ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் பாமக தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒழுங்கு நடவடிக்கை தொடா்பான முடிவை ராமதாஸே அறிவிப்பாா் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவிலிருந்த நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், சித்தாத்தூா் ... மேலும் பார்க்க

வீட்டுக்கு வர மனைவி மறுப்பு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திண்டிவனம் அருகே பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவனம் வட்டம், கொணக்கம்பட்டு கிராமத்தைச்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியா் கைது

விழுப்புரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியொன்றில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், அந்த பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் மகாத்மாகாந்தி சாலையிலுள்ள மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ண... மேலும் பார்க்க

லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பிடாகம், நத்தமேடு,... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம் : மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக மூவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும்,அவா்களிடமிருந்த பணம் , பைக்குகள், கைப்பேசிகள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். விழ... மேலும் பார்க்க