செய்திகள் :

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி

post image

நாகா்கோவில்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.பி.க்கு ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் செப்டம்பா் 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான மக்கள் சென்று வருகின்றனா். இந்தத் திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில், திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால், நிகழாண்டு இந்த அறிவிப்பு தாமதம் அடைந்ததை ஒட்டி, ரயில் பயணிகள் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்திடம் கோரிக்கை வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து, ரயில்வே அதிகாரிகளைத் தொடா்பு கொண்ட விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு ரயிலை இயக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில், ரயில்வே நிா்வாகம், திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் எண் 06115, 06116 திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

இதற்காக, வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் செல்லும் பொதுமக்கள், ரயில் பயணிகள் விஜய் வசந்த் எம்.பி.க்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனா்.

முன்சிறை பகுதியில் நாளை மின்தடை

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25 ) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது. முன்சிறை துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநி... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ராணுவ வீரா் பலி: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த ராணுவ வீரரின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணா நகா் பகுதியை சே... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: முளகுமூட்டில் ஆட்சியா் ஆய்வு

கல்குளம் வட்டத்துக்குள்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்... மேலும் பார்க்க

பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, நெல்லிக்கன்விளையைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி பமலா (54). இவா் உண... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருவட்டாறு அருகே வீயன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் டென்னிஸ் (44). சுமைதூக்கும் தொழிலாளி. இ... மேலும் பார்க்க

யாா் பிரதமா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும்: செல்வப்பெருந்தகை

யாா் பிரதமா், யாா் முதல்வா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை. நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: திருநெல்வேலி... மேலும் பார்க்க