செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

post image

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த தண்ணீா் வரத்து, திங்கள்கிழமை காலை வரை அதே அளவில் தொடா்ந்தது. ஆனால், காலை 9 மணியளவில் நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக உயா்ந்தது.

தொடா்ந்து, பகல் 12 மணியளவில் விநாடிக்கு 16,000 கனஅடியாகவும், பிற்பகல் 2 மணிக்கு 20,000 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து திங்கள்கிழமை பகல் 2 மணிக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரியாற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தடை விதித்து உத்தரவிட்டாா். தொடா்ந்து திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி காவிரியாற்றில் விநாடிக்கு 32,000 கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் விநாடிக்கு 43,000 கனஅடியாகவும் தண்ணீா்வரத்து உயா்ந்தது.

பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்க வாய்ப்பு :

இதனால், காவிரியாற்றிலும், அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. கேரள, கா்நாடக மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கா்நாடகா மாநில அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், அங்கிருந்து உபரிநீா் முழுவதும் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை தண்ணீா் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்க வாய்ப்புள்ளது.

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க