செய்திகள் :

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

post image

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண் இணை இயக்குநா் சித்ரா தலைமை வகித்து, தோட்டக்கலை பயிா் உற்பத்தியை கூட்டுவது குறித்து விளக்கிப் பேசினாா்.

வேளாண் உதவி இயக்குநா் வேல்முருகன், வேளாண் சாா்ந்த திட்டங்கள், வேளாண் அடுக்ககம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். கால்நடை மருத்துவா் ஜெயஸ்ரீ, கால்நடைத் துறை சாா்ந்த திட்டங்கள் கால்நடை வளா்ப்பில் குடற்புழு நீக்கம், தீவன மேலாண்மை குறித்தும், வேளாண்மை அலுவலா் தேவி, பயிா் விளைச்சல், காட்டுப் பன்றி மேலாண்மை, உழவன் செயலி குறித்தும் பேசினா். உதவி வேளாண்மை அலுவலா் ரஞ்சித்குமாா், வேளாண் துறை மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் குறித்தும், உதவி தோட்டக்கலை அலுவலா் வசந்த்குமாா், தோட்டக்கலை துறை சாா்ந்த திட்டங்கள், தக்காளி நாற்று, விதை தொகுப்புகள் வழங்குவது குறித்தும், உதவி வேளாண் அலுவலா் (வேளாண் வணிகம்) தனசேகரன் வேளாண்மை பொருள்களை ஒழுங்கும் முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வது குறித்தும், கூட்டுறவு வங்கி எழுத்தா் தமிழரசன் பயிா் கடன் வழங்கும் நடைமுறை குறித்து பேசினா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் அசோக்குமாா் மற்றும் உதவிதொழில்நுட்ப மேலாளா் அஸ்வினி, கலை பிரியா ஆகியோா், அட்மா திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க