செய்திகள் :

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

post image

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு, மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டங்கள் ஏராளமான வாகனங்களில் சென்றனா். அந்த வகையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் சென்றிருந்தனா். மாநாடு முடிந்து இரவு மதுரையிலேய தங்கிவிட்டு, மறுநாளான வெள்ளிக்கிழமை திரும்பினா்.

இந்த வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்டம், கரகத அள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளுக்கு சென்று திரும்பும் வாகனங்களுக்கு அண்மைக் காலமாக கட்டணங்கள் வசூலிப்பது கிடையாது. அந்த வகையில், மதுரை சென்று திரும்பிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்ததைக் கண்டித்து, தருமபுரி மேற்கு மாவட்ட பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளா் குமாா் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அரசியல் கட்சி மாநாடு என்றில்லாவிட்டாலும், நாங்கள் இதே பகுதியைச் சோ்ந்தவா்கள், அதற்கான ஆதாா் உள்ளிட்ட ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. எனவே உள்ளூா் வாசிகளுக்கு கட்டணம் கிடையாது என்பதை மறந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பது தவறு எனப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனா்.

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க