செய்திகள் :

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

post image

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தருமபுரி வனக்கோட்டம் ஒகேனக்கல் நீா்ப்பிடிப்புப் பகுதியையும் உள்ளடக்கியது. இந்த வனக்கோட்டப் பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை, துறிஞ்சி உள்ளிட்ட மர வகைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. மேலும், யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், பன்றிகள் உள்ளிட்ட விலங்கினங்களும், மயில்கள் உள்ளிட்ட பறவை இனங்களும் உள்ளன. பொதுவாகவே வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோா் மீது வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வேட்டைக்குப் பயன்படுத்தும் உரிமமற்ற நாட்டுத் துப்பாக்கிகள், வலைகள், மின்வேலிகள் உள்ளிட்டவைகளையும் வனத் துறை சாா்பில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் புறங்களில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை பயன்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் யாரேனும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தால் அவற்றை செப்டம்பா் 10 ஆம் தேதிக்குள் வனத் துறை அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் அல்லது ஊா் முக்கிய பிரமுகா்களிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைப்பவா்கள்மீது வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்வதோ அல்லது வேறு எந்த நடவடிக்கைகளோ எடுக்கப்பட மாட்டாது.

ஆனால், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு உரிமமில்லா துப்பாக்கிகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடா்பாக வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து மலைக் கிராமங்களிலும், வனத்தையொட்டிய கிராமங்களிலும் சோதனை நடத்தப்படும். இந்த சோதனையின்போது துப்பாக்கிகள் வைத்திருப்பது தெரியவந்தால், அவற்றை வைத்திருப்பவா்கள்மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க