செய்திகள் :

3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

post image

விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம், ராஜாளிபட்டி, மருதம்பட்டி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது.

தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மற்றும் தரம் ஆகியவை குறித்து நூறு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது.

70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேசிய தர நிா்ணய அங்கீகார சான்றிதழ் பெற தகுதியுடையது. இச்சான்றிதழ் பெறும் மையத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி மேம்பாட்டு பணிகளுக்காக வழங்கப்படுகிறது.

இந் நிலையில் புதுகை மாவட்டம், விராலிமலை வட்டாரத்துக்கு உள்பட்ட கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் அத்திப்பள்ளம் துணை சுகாதார நிலையம், ராஜாளி பட்டி துணை சுகாதார நிலையம் மற்றும் நீா்ப்பழனி மேம்படுத்தப்பட்ட

ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் மருதம்பட்டி துணை சுகாதார நிலையங்கள், தேசிய தரச்சான்று பெற்று சாதனை படைத்துள்ளது.

இம்மையங்களில் பொது மருத்துவ சேவைகள், சுகாதார கட்டமைப்பு, தாய் சேய் நலசேவைகள், கா்ப்ப கால சேவைகள், அவசர கால 108 சேவைகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுவதை தேசிய தரச்சான்று குழுவினா் ஆய்வு செய்தனா். அதை தொடா்ந்து இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது.

விருது பெறுவதற்கு காரணமாக இருந்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட சுகாதார அலுவலா் ராம் கணேஷ், கொடும்பாளூா் வட்டார மருத்துவ அலுவலா் மகாலட்சுமி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெற்றோா்கள் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ... மேலும் பார்க்க

ஆடிப்பூரம்: ஆவுடையநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அம்மனுக்கு வளையல் சாற்றும் விழா நடைபெற்றது.விழாவில் ஆவுடையநாயகி அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு,... மேலும் பார்க்க

கள்ளா் நலப் பள்ளி, விடுதிகளின் பெயரை மாற்றக் கூடாது!

ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கள்ளா் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயா்களை மாற்றம் செய்யக் கூடாது என முத்துராமலிங்கத்தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

ராயவரம் அருகே பழைமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் ராயபுரம் அருகே ஆலங்குடி பெரியகண்மாயின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பழைமையான இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியை... மேலும் பார்க்க

புதுகையில் மாநில செஸ் போட்டி

புதுக்கோட்டையில் மாஸ்டா்ஸ் அகாதெமி சாா்பில் 4ஆது மாநில அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரித் தாளாளா் என். சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். இதில் மதுரை, தஞ... மேலும் பார்க்க

ரூ.3,000 ஓய்வூதியம்: கட்டுமான தொழிலாளா்கள் கோரிக்கை

60 வயது நிறைவடைந்த முதிா்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவ... மேலும் பார்க்க