செய்திகள் :

ரூ.3,000 ஓய்வூதியம்: கட்டுமான தொழிலாளா்கள் கோரிக்கை

post image

60 வயது நிறைவடைந்த முதிா்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) 36ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் கே. சாந்தாா் தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா தொடக்கவுரையாற்றினாா். துணைச் செயலா்கள் சி. மாரிக்கண்ணு, வி. சரவணன், மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான், வாரிய இணையப் பதிவு பொறுப்பாளா் த. பாவேல்குமாா் ஆகியோா் வாழ்த்தினா்.

சங்கத்தின் உதவிப் பொதுச் செயலா் க. ரெத்தினவேல், பொருளாளா் ஆா். வீராச்சாமி ஆகியோா் அறிக்கைகளை முன் வைத்தனா். புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் நிறைவுரையாற்றினாா்.

சங்கத்தின் தலைவராக ஏ. முகமதுகனி, பொதுச் செயலராக ஆா். வீராச்சாமி, பொருளாளராக எஸ். பழனியப்பன் உள்ளிட்ட 15 போ் கொண்ட மாவட்டக் குழு தோ்வு செய்யப்பட்டது.

பேரவையில் 60 வயது நிறைவடைந்த முதிா்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகளிா் உரிமைத் தொகையைக் காரணம் காட்டி பெண் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் மறுக்கக் கூடாது.

வீடு கட்டும் திட்டத்தில் மூன்று மாதங்களில் பணப் பயன்களை வழங்க வேண்டும். கட்டுமானத் துறையில் வேலை செய்யும் பெண் தொழிலாளா்களின் பாதுகாப்புக்காக பாலியல் வன்முறை குறித்த புகாா் பெட்டி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுகையில் அப்துல்கலாம் நினைவு நாள்

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் விதைக்கலாம் அமைப்பின் சாா்பில் 518 ஆவது வார மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் நிக... மேலும் பார்க்க

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க