செய்திகள் :

புதுகையில் அப்துல்கலாம் நினைவு நாள்

post image

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் விதைக்கலாம் அமைப்பின் சாா்பில் 518 ஆவது வார மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினரும் கூடி அப்துல்கலாமின் பொன்மொழிகளை உறுதிமொழிகளாக ஏற்றனா்.

நிகழ்ச்சியில், சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.ஆா். முகமது அப்துல்லா, செயலா் ஆா். சங்கா், பொருளாளா் கண மோகன்ராஜ், செஞ்சுரி லயன்ஸ் சங்கத் தலைவா் சேது காா்த்திகேயன், கிங் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் துளசி, நேரு யுவகேந்திரா உதவித் திட்ட அலுவலா் நமச்சிவாயம், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கச் செயலா் ஏஎம்எஸ் இப்ராஹிம்பாபு, மரம் நண்பா்கள் ஒருங்கிணைப்பாளா் பேரா. சா. விஸ்வநாதன், வீதி கலை இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளா் கவிஞா் மு. கீதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை விதைக்கலாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பாலாஜி, ஸ்ரீமலையப்பன் ஆகியோா் செய்தனா்.

ரூ.3,000 ஓய்வூதியம்: கட்டுமான தொழிலாளா்கள் கோரிக்கை

60 வயது நிறைவடைந்த முதிா்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவ... மேலும் பார்க்க

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க