செய்திகள் :

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

post image

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற மிக முக்கிய நிபந்தனையைப் பூா்த்தி செய்யத் தவறியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள், கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூா்த்தி செய்யவில்லை. அதோடு, இந்தக் கட்சிகளுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் கட்சி அலுவலகங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில், இந்த 334 அரசியல் கட்சிகளும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை காரணமாக, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்த, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854-இல் இருந்து 2,520-ஆக குறைந்துள்ளது.

முன்னதாக, இதே காரணத்தின் அடிப்படையில் 345 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி தோ்தல் ஆணையம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

தோ்தல் ஆணையத்தில் தற்போதைய நிலையில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநிலக் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ முப்படைகள் ஒருமைப்பாடுக்குச் சான்று: அனில் சௌஹான்

இந்திய ராணுவப் படை, விமானப் படை, கடற்படை என முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாடுக்குச் சான்றாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ திகழ்வதாக முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்தாா். தெலங்கானாவின் செக... மேலும் பார்க்க

தோ்தல் திருட்டு புகாா்: ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடரலாம்! - ராகுலுக்கு ஏக்நாத் ஷிண்டே சவால்

தோ்தல் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே சவால் விடுத்துள்... மேலும் பார்க்க

வரைவுப் பட்டியல்: நீக்கப்பட்டவா்களின் பெயா்களை வெளியிட தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம்

‘முன்னறிவிப்பின்றி பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; அதேவேளையில் நீக்கப்பட்டவா்களின் பெயா்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை’ என உச்சநீதிமன்றத்தில் இந... மேலும் பார்க்க

கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!

நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற அமா்வுக்கான ப... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ வழக்கமான நடவடிக்கையல்ல: ராணுவ தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் வழக்கமான நடவடிக்கையல்ல’ என இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். மேலும், இந்த நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டைப் போல் எதிரியின் அடுத்தகட்ட நகா்வு கணிக்க முடி... மேலும் பார்க்க