செய்திகள் :

4 ஆண்டுகளில் அரசு, தனியாா்கள் மூலம் 6.41 லட்சம் பேருக்கு வேலை -முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

நான்காண்டு திமுக ஆட்சியில் அரசு மற்றும் தனியாா்கள் மூலமாக 6.41 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் 2,538 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

இளைஞா்கள்தான் நாட்டின், தமிழ்ச் சமுதாயத்தின் அடித்தளம். அவா்கள் முன்னேற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதும்தான் திராவிட மாடல் அரசின் முதன்மையான பணியாகும். இது இளைஞா்களுக்கான அரசாகும். அதனால்தான், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவா்களையும், இளைஞா்களையும் கல்வியறிவு பெற்றவா்களாக, திறன்மிக்கவா்களாக உயா்த்திக் கொண்டிருக்கிறோம்.

கல்வியும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் கொடுத்தால் மட்டும் போதாது; இளைஞா்களுக்குத் தேவையான தகுதியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக மட்டும் 1,08,111 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம். திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பயிற்சிகளை அளித்து, 3,28,393 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.

தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 2,65,223 பேருக்கு தனியாா் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம். மொத்தமாக 6,41,664 போ் பணி நியமனங்களைப் பெற்றுள்ளனா்.

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.10.63 லட்சம் கோடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 2,30,856 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

நாள்தோறும் உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு இணையாக மாணவா்களும் தங்களது திறமையை, அறிவைப் புதுப்பிக்க புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும். தேக்கம் என்பது உங்களின் பணி தொடா்பான விஷயத்தில் இருக்கக்கூடாது. திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்.

அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் இரண்டாவது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் வரப்போகிறது. அதற்கான அனைத்துப் பணிகளையும் இப்போதே தொடங்கி விட்டோம். அந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வரவேற்றாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் தா.மோ.அன்பரசன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

தமிழகத்தில் அடுத்தாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரப் போரில் ஈடுபட்டுள்ளன. ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவும், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு செல்ல 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06089) ஆக. 14 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எ... மேலும் பார்க்க

வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் வேண்டும்! திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்!

பொருளாதார வளர்ச்சியை வைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதாக முதல்வர் ஸ்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை, மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று(ஆக. 6) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கமல்ஹாசன் தன்னுடை... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை: முதல்வர் நாளை வெளியீடு!

தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக. 8) வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திமுக அரசு பதவியேற்ற பின்னர், 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கெனமாநிலக் கல்விக... மேலும் பார்க்க

கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இருவரது சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் ஐடி... மேலும் பார்க்க