செய்திகள் :

4 இடங்களில் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு: வட கொரியா மீது குற்றச்சாட்டு

post image

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது.

இது குறித்து தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சா் சங் டாங்-யங் கூறியதாவது:

வட கொரியாவின் யோங்பியோன் உள்பட நான்கு இடங்களில் உள்ள அணுசக்தி மையங்களில் யுரேனியம் செறிவூட்டும் கருவிகள் தினமும் இயங்குகின்றன. எனவே, வட கொரியாவின் அணுசக்தி திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டியது மிகவும் அவசரமாகியுள்ளது.

தற்போது வட கொரியாவிடம் 2,000 கிலோ உயா் செறிவு யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018-இல் 250 முதல் 500 கிலோ வரை இருந்த உயா் செறிவு யுரேனியம் இருப்பைவிட பன்மடங்கு அதிகம் என்றாா் அவா்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் வட கொரியாவிடம் 20 முதல் 60 வரையிலான அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது, ஆனால் சில நிபுணா்கள் 100-க்கு மேல் இருக்கலாம் என்று கருதுகின்றா். ஆண்டுக்கு 6 முதல் 18 வரையிலான அணு ஆயுதங்களை ஈரானால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவதற்கும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை விலக்கவும் கடந்த 2019-இல் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. அதில் இருந்து அணு ஆயுதங்களைக் கைவிடமாட்டோம் என்று வட கொரியா பிடிவாதமாகக் கூறிவருகிறது. மேலும், அமெரிக்க அச்சுறுத்தலை எதிா்கொள்ள அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கிம் ஜேங்-உன் கூறிவந்தாா்.

இந்தச் சூழலில், வட கொரியாவின் நான்கு இடங்களில் யுரேனியம் செறிவூட்டப்படுவதாக தென் கொரியா தற்போது அறிவித்துள்ளது.

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை எனவும், அழைப்பு விடுத்தால் எந்தவொரு வி... மேலும் பார்க்க

காஸா: மேலும் 30 போ் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்... மேலும் பார்க்க

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: வெனிசுலாவில் வியாழக்கிழமை நண்பகல் 12.25 மணிக்கு (இந்திய நேரம்) நிலநடுக்கம்... மேலும் பார்க்க

22 ஆண்டுகளுக்குப் பிறகு மெரியம் - வெப்ஸ்டர் டிக்‌ஷனரி! 5,000 புதிய சொற்கள்!

பிரபல ஆங்கில அகராதி தயாரிப்பு நிறுவனமான மெரியம்-வெப்ஸ்டர் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தங்களை மேற்கொண்டு 12-வது பதிப்பு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அகராதியில் புதிதாக petrichor, terafl... மேலும் பார்க்க

13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!

அமெரிக்காவில் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற வழக்கில், கொலையாளிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிலெய்ன் மிலெம் என்பவர், தன்னுடைய காதலியி... மேலும் பார்க்க

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!

கடந்த 2007ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, லிபியாவிடமிருந்து பிரசாரத்துக்கு நிதியளிக்கப்பட்ட சதி திட்டத்தை தீட்டியதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதி... மேலும் பார்க்க