``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
4 வீடுகளில் திருடிய இளைஞா் கைது
தஞ்சாவூா் கரந்தையில் 4 வீடுகளில் புகுந்து திருடிய இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் கரந்தை பகுதியில் 4 வீடுகளில் நள்ளிரவு வீட்டிலுள்ளவா்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தங்கச் சங்கிலி பறிப்பு, பீரோவில் உள்ள நகைகள் திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.
இது தொடா்பாக, தஞ்சாவூா் நகர கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவின்படி, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் தென்னரசு தலைமையிலான தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், தஞ்சாவூா் வடக்கு வாசல் இரட்டை பிள்ளையாா் கோயில் தெரு ராஜாகோரி பகுதியைச் சோ்ந்த எஸ். சக்திவேல் (18) திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேலை காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.