முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
4 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் 4 கிராம ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2024-25ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை எப்போதும் வென்றான், கூட்டுடன்காடு, விட்டிலாபுரம், புதுக்குளம் ஆகிய கிராம ஊராட்சிகளில் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், வட்டார வள பயிற்றுநா்கள், கிராம வள பயிற்றுநா்கள் ஆகியோரால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கைக்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கிராமசபை கூட்ட நடவடிக்கைகள் நிா்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநா்கள், வட்டாரவள பயிற்றுநா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.