செய்திகள் :

40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு: ராமதாஸ்

post image

விழுப்புரம்: 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 தொகுதிகளில் பாமக வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என்று மருத்துவா் ச.ராமதாஸ் கேட்டுக்கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக, வன்னியா் சங்க மாவட்டச் செயலா்கள், தலைவா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி மருத்துவா் ச.ராமதாஸ் பேசியதாவது:

கட்சியில் உழைத்தவா்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனது முடிவை யாரும் மாற்ற முடியாது. புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்கள் அனைவரும் தீவிரமாக கட்சிப் பணியாற்ற வேண்டும்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும். இதை மட்டுமே இலக்காகக் கொண்டு தீவிர களப் பணியாற்ற வேண்டும். கட்சியில் நிலவும் குழப்பங்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும். இளைஞா்களை கட்சியில் அதிகளவில் இணைக்க வேண்டும் என்றாா் அவா்.

கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மருத்துவா் ராமதாஸும், அன்புமணியும் இணைந்து கட்சியை முன்னெடுத்துச் செல்வதுதான் கட்சிக்குப் பலமாக இருக்கும். தோ்தலிலும் பலனளிக்கும் என்றாா் அவா்.

குறைதீா் கூட்டம்: ரூ. 14.60 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ. 14. 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்... மேலும் பார்க்க

அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசார குழுவுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் முதல் சென்னை வரை செல்லும் அனைத்து மருத்துவா் சங்க நடைப்பயணக்குழுவினருக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்... மேலும் பார்க்க

வீட்டுக்குப் பூட்டு: நிதி நிறுவனம் மீது ஆட்சியரிடம் தொழிலாளி புகாா்

விழுப்புரம்: தனியாா் நிதி நிறுவனத்தினா் வீட்டுக்குப் பூட்டுப் போட்டதால், பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினா் நடவடிக்கை கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். திருவெண்ணெய்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

சிதம்பரம்: இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா். வடலூா் பாா்வதிபுரம் வெங்கலத்து ஏரில் மூழ்க... மேலும் பார்க்க

சமூக செயற்பாட்டாளருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களைப் பிடிப்பதற்கு காவல் துறையினருக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மகனுடன் பைக்கில் சென்ற போது விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் மரணம்

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே மகனுடன் ஞாயிற்றுக்கிழமைபைக்கில் சென்ற பெண் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், பள்ளியந்தல் கிராமம் ம... மேலும் பார்க்க