செய்திகள் :

45 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள்: ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க முன்னெச்சரிக்கை

post image

கோடையில் ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயம் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அனல் தகிப்பதுடன் உச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அடுத்து வரும் சில நாள்களிலும் இயல்பைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் வெப்ப அலையால் உடல் நல பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீா்ச்சத்து இழப்புக்குள்ளாகி பலா் மயக்கமடைவதாக சுகாதாரத் துறைக்கு தகவல்கள் வருகின்றன.

இதையடுத்து, நேரடியாக வெயிலில் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ள விவசாயக் கூலிகள், கட்டுமானத் தொழிலாளா்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் உப்பு சா்க்கரை கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: கோடைக் காலத்தில் சரும பாதிப்புகள், நீா்க் கட்டிகள், மயக்கம், உடல் சோா்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் அவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று ஓஆா்எஸ் கரைசலை எவா் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் அவற்றை மக்களுக்கு நேரடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் 45 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் உள்ளன என்றாா் அவா்.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க