செய்திகள் :

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

post image

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்குள்பட்ட வேடப்பட்டி அண்ணா நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இவா்கள் தரப்பில் அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் கூறியதாவது: கடந்த 1976-ஆம் ஆண்டு, 22 நெசவாளா்கள் குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் அப்போதைய சாா் ஆட்சியா் சாந்தஷீலா நாயா் பரிந்துரையின்பேரில், எங்களுக்கான வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், சுமாா் 49 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

இதனிடையே, கடந்த 2001-ஆம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சிக் கூட்டத்தில், அண்ணா நெசவாளா் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்படுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால், கடந்த 6 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தோம். ஆனாலும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. தற்போது, அரசுக்கு ஆட்சேபனை இல்லாத பகுதியில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, எங்கள் பகுதியில் வசிக்கும் 28 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்றாா் அவா்.

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு த... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரத... மேலும் பார்க்க

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

கொடைரோடு அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெற்றோரும் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அ... மேலும் பார்க்க