செய்திகள் :

5 மாதங்களில் பிறந்த அபூர்வ குழந்தை; கின்னஸ் உலக சாதனையில் பதிவு - ஆச்சர்ய பின்னணி என்ன?

post image

அமெரிக்காவின் அயோவா நகரில், 21 வாரங்கள் மட்டுமே வளர்ச்சி கண்ட ஒரு குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த குழந்தை, உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World's Most Premature Baby) கின்னஸ் உலக சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாஷ் கீன் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தை, ஜூலை 5, 2024 அன்று, எதிர்பார்த்த பிரசவ தேதியை விட 133 நாட்கள் முன்னதாக, வெறும் 283 கிராம் எடையுடன், ஒரு சோப்பு கட்டியின் அளவில் பிறந்திருக்கிறது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) அந்த குழந்தையை வைத்துள்ளனர் மருத்துவர்கள். இந்த வருடம் ஜனவரி மாதம் தான் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Baby

நாஷின் தாயான மோலி தனது முதல் கர்ப்பத்தின்போது கருச்சிதையை எதிர்கொண்டுள்ளார். ஒரு குழந்தையை இழந்த வேதனை ஏற்கனவே அவருக்கு இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி அவருக்கு முழு கர்ப்ப காலத்தை தாங்க முடியாத ஒரு மருத்துவ நிலையும் இருந்துள்ளது. 20-வது வார மருத்துவ பரிசோதனையில், கர்ப்ப வாய் 2 சென்டிமீட்டர் விரிவடைந்திருப்பது தெரிந்தபோது, நாஷையும் இழக்க நேரிடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சியுள்ளனர்.

பிரசவம் 21 வாரங்களுக்கு முன்பே தொடங்கியிருக்கிறது. மருத்துவ உதவியுடன், அவர் பிரசவம் 21 வாரங்களில் நடந்து முடிந்தது.

அடுத்த ஒரு மாதம் முழுவதும், நாஷை உயிருடன் வைத்திருக்கவும், வளர்ச்சியடையவும் ஒரு முழு மருத்துவ குழு பணியாற்றிருக்கிறது.

நாஷுக்கு, மிகவும் முன்கூட்டியே பிறந்தவர்களுக்கு இருக்கும் பொதுவான சில சிக்கல்களும், வளர்ச்சி தாமதங்களும் ஏற்பட்டிருந்தாலும், அவரது முன்னேற்றம் மருத்துவ அறிவியலால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று அவரது மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது ஒரு வயதை தாண்டிய நாஷ், உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World's Most Premature Baby) கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்ன?

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக... மேலும் பார்க்க

’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார். இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்: என்ன நடந்தது?

பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங... மேலும் பார்க்க

US: சிலந்தி கடித்ததால் சிறுநீரகம் செயலிழப்பு; உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அயோவாவில் 16 வயது சிறுவனுக்கு சிலந்தி கடித்து தொற்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோவாவின் ஸ்லேட்டர் பகுதியைச் சேர்ந்த நோவா ஜான்ச... மேலும் பார்க்க

Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் வளர்ச்சி!

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (ceo) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பி... மேலும் பார்க்க

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க