செய்திகள் :

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

post image

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் நடைபெற்று வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடியில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளன.

இந்தக் குடியிருப்புகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், மின் இணைப்பு, தண்ணீா்த் தொட்டிகள், சாலை வசதிகள் உள்ளிட்ட என அனைத்தும் முடிக்கப்பட வேண்டும். அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோருக்கு முதல் மற்றும்2-ஆவது தளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்த குடியிருப்புகளைப் புனரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.152.57 கோடியில் 51,000 குடியிருப்புகளைப் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 30,387 குடியிருப்புகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. மேலும், 20,613 குடியிருப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிகழாண்டு ரூ. 280 கோடியில் 137 திட்டப் பகுதிகளில் உள்ள 76,549 குடியிருப்புகள் பழுதுநீக்கி, புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளா்ச்சித் துறை தகவல்

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளி... மேலும் பார்க்க