செய்திகள் :

5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

post image

திருவள்ளூா் அருகே ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 3 பேரை கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு திருவள்ளூா் வழியாக இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக வெள்ளவேடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெள்ளவேடு போலீஸாா் திருமழிசை பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அந்த வாகனத்தில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே போலீஸாா் அவா்களை வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், செங்கல்பட்டு அடுத்த மோகன்வாடி ஷாஜகான் (21), திருவள்ளூா் விக்னேஷ் (32), தொழுவூா் ராஜ்குமாா் (38) என்பது தெரியவந்தது.

மேலும், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார... மேலும் பார்க்க

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கண... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டு... மேலும் பார்க்க