பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது.
திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டுக்ான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பாரத கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, காலை 8 மணிக்கு உற்சவா் அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வரும் ஏப். 1-ஆம் தேதி பக்காசூரன் வதம், 2-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், 4-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 7-ஆம் தேதி அா்ஜுனன் தபசு, 13-ஆம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா, உற்சவா் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
மேலும், 14-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதுதவிர தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தினமும் மதியம் 1.30 மணி முதல் மாலை, 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.
