செய்திகள் :

`500 பேரிடம் மட்டுமே இருக்கும் பாஸ்போர்ட்' அரிதானதாக இருக்கக் காரணம் என்ன?

post image
நாடு விட்டு நாடு, பயணிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்று. அயல் நாடுகளில் பாஸ்போர்ட் இல்லாமல், அடியெடுத்து வைக்க முடியாது. பாஸ்போர்ட் கையிலிருந்தால்தான் நீங்கள் ஒரு நாட்டிற்குள் சுதந்திரமாகச் சுற்றி வர முடியும்.

பாஸ்போர்ட் வழங்குவதன் அடிப்படை நோக்கமே, ஒரு நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எங்கிருந்து வருகிறார், எங்கு சென்றார், எங்கு செல்கிறார் போன்ற விஷயங்களைக் காட்டுவதற்காகத்தான். அப்படி முக்கியமானதாக இருக்கும் பாஸ்போர்ட்டின் மதிப்பு ஒவ்வொரு நாட்டிற்கேற்ப மாறுபடுகிறது.

உலகளவில் மதிப்புமிக்க பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 80ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 5ஆம் ஆண்டாக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது.

ஜப்பானிய பாஸ்போர்ட் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் ஒன்றாக இருப்பதால் அதனை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் உலகின் மிகவும் அரிதான பாஸ்போர்ட் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உலகளவில் சுமார் 500 பேர் மட்டும் தான் வைத்திருக்கிறார்களாம். உலகின் மிக அரிதான பாஸ்போர்ட் மால்டா தீவின் இறையாண்மை இராணுவ ஆணையால் (Sovereign Military Order of Malta) வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஆர்டர் ஆஃப் மால்டா அல்லது நைட்ஸ் ஆஃப் மால்டா என்று அழைக்கப்படுகிறது. இது எந்த பிரதேசத்தையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், இந்த ஆணை பெரும்பாலும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு இறையாண்மை நிறுவனமாகக் கருதப்படுகிறது . இந்த ஆணை தனிப்பட்ட கார் உரிமத் தகடுகள், நாணயம், பாஸ்போர்ட் மற்றும் முத்திரைகளை வெளியிடுகிறது. தற்போது, உலகளவில் சுமார் 500 இராஜதந்திர பாஸ்போர்ட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாஸ்போர்ட்டுகள் 44 பக்கங்களைக் கொண்டுள்ளன.

அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை பயணத்திற்கான சரியான ஐடியாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இது 120 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Metro: ``மாதாந்திர பார்க்கிங் பாஸ் பிப்., 1 முதல் நிறுத்தம்" - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் 01.02.2025 முதல் நிறுத்தபடுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.இது குறித்து எக்ஸ் தளத்தில், ``மெட்ரோ ரயில் நில... மேலும் பார்க்க

ஏலகிரி: `முக்கியமான சுற்றுலாத்தலத்தில் கழிவறை வசதிக்கூட இல்லை!' - சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைகளின் இளவரசியான ஏலகிரி மலை, இயற்கை அழகை நேசிக்கும் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. இங்கு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்க... மேலும் பார்க்க

Traffic: சென்னை, பெங்களூரு இல்லை; இந்தியாவின் மெதுவான நகரம் இதுதான்!

போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக மெதுவாக நகரும் நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.டாம் டாம் ட்ராஃபிக் இண்டெக்ஸ் என்ற டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள தரவு... மேலும் பார்க்க

Chennai Metro: 'வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது!'- மெட்ரோ பயணிகள் என்ன செய்ய வேண்டும்?!

சென்னை மக்கள் பயணத்தை கொஞ்சம் எளிதாக்கி தருவதில் 'மெட்ரோ ரயில்கள்' மிக முக்கிய பங்காற்றுகின்றன. இதில் தினமும் பயணம் செய்பவர்கள் க்யூ லைனை தவிர்க்க மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வரும... மேலும் பார்க்க